THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது!

மாங்குளம் – தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் இன்று முல்லைதீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.