THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (19) நடைபெற்ற அந்த கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் தொடர்பில் பிரதமர் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இந்தநிலையில் அமைச்சர்கள் தனித்தனியாக தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.