THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

புதிய பிரதமர் இவரா…? – பதவியை இராஜினாமா செய்த ரணில்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். சற்று முன்னர் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதுடன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றினையும் ஆற்றவுள்ளார்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதன் பின்னர் அந்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை நியமிக்க பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(PARTHIPAN)