THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்…..

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த விஜயத்தை அவர் இன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபடுகளில் ஈடுபடவுள்ள நிலையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
தொடர்ந்தும் மெனிக்ஹின்ன வூரிகடுவ பிரிவெனவுக்கும் சென்று ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து ஆசிப்பெறவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி இன்று மாலை கெடம்பே ராபோஜசாச விகாரைக்கும் சென்று, விகாரையின் விகாராதிபதி கெப்படியாகொட பிரிவிமல தேரரரையும் சந்தித்து ஆசிபெறவுள்ளாதாகவும் தெரியவந்துள்ளது.