THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

வாகன விபத்தில் ஒருவர் பலி!…

பிலியந்தலை ஜாலியகொட இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெஸ்பேவ நகரில் இருந்து ஜாலியகொட பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பம் மற்றும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
19 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தில் படுகாயமடைந்த பிலியாந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் சடலம் பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏனையோர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.