THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

கடல் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு சற்று அதிகமாக காணப்படுவதால் ஒருநாள் மற்றும் சிறு மீன்பிடிப் படகுகளும் கவனமாக செயற்பட வேண்டும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சுற்றுயுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய தெரிவித்துள்ளார்
அந்த வகையில் , காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.