THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சவூதி தூதுவர் சந்திப்பு!….



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூவர் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சவுதி அரேபிய அரசாங்கத்தின் சார்பில் தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, சவுதி  அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட குழுவினரை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.