THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலி!… #accident_in_sri_lanka

புத்தல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி, உந்துருளி மற்றும் மிதிவண்டி மோதியதிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உந்துருளியின் பின்னால் பயணித்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மிதிவண்டி ஓட்டுனர் மற்றும் உந்துருளியின் சாரதி ஆகியோர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.