ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து நரேந்திர மோடி அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார்.
அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடில்லி சென்று வந்தார்.
அதனையடுத்து 200 வெளிநாட்டு பயணம் வரை செய்திருப்பார். மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்தவொரு நற்காரியங்களும் இடம்பெறவில்லை. ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பலபரீட்சை நடத்துவதிலேயே காலம் உருண்டோடிவிட்டது.
அதனையடுத்து புதியவரான கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடந்த நொவெம்பர் மாதம் 16 ஆம் திகதி நுற்றுக்கு 80 வீதமான பௌத்த சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி கட்டிலில் ஏறினார்.
அவர் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்நதியாவிலிருந்து அந்நாட்டு தமிழரான வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜயசங்கர் பறந்து வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையும் அவருக்கு வழங்கினார். இந்தியாவிற்கு வருகின்றீர்களா என்ற கேள்வியினையும் முன்வைத்தார். அதற்கு புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச ஆம் வருகிறேன் என்று வாக்குறுதியினையும் வழங்கினார். வாக்குறுதிக்கு அமைவாக எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியாவிற்கு செல்லவுள்ள புதிய ஜனாதிபதி கோட்டாபய இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதனையே நான் Beck To Beck என முகப்பில் வெளிக்கொணர்ந்திருந்தேன்.
அதேநேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்தியாவிற்கு அழைத்தமையை தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்த்துள்ளனர்.
உடனடியாக இந்த அழைப்பினை கைவிடுமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மோடி மற்றும் கோட்டாவின் சந்திப்பினை தமிழக அரசாங்கம் எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டும் – காத்திருப்போம்
Cap comentari:
Publica un comentari a l'entrada