THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த வாய்தகராறால் நடந்த விபரீதம்

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த சண்டையில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த நபர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை வருகின்ற 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி சந்தேக நபர்களுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் மீன் பிடி தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு மாறி ஒருவருகொருவர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.