THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து!…

இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியது.
பலாங்கொட பகுதியில் இருந்து நோர்வுட் பகுதிக்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெறிவித்தனர்.
பன்றி ஒன்று குருக்கே சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.