THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

மக்கள் விரும்பியதையே நான் செய்வேன் : கோட்டாபய

என்னுடைய மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் அந்த ஆணையின்படியே நான் நடப்பேன் என கோட்டாபய தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த மதகுருமார் மத்தியில் கருத்து தெரிவிக்கும்பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் , அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#president_gotabaya_rajapaksa #srilanka_local_news #thamillankanews