THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

கோட்டாபய – மோடி சந்திப்பில் நடக்க போவது என்ன!…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13 வது திருத்தச் சட்டம் குறித்து குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை குறித்து, இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும், இது பெரும்பாலும் தமிழர்களுக்கு பயனளிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.