THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

மைத்திரிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ன செய்கிறது!..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றிற்குள் கொண்டு வருவதற்கே தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலக்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் பௌசி தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடிய போது தன்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது ஆகும்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்ற செல்ல வேண்டுமாயின் அவர் என்னிடம் தெரிவித்திருக்கலாம்.
இவ்வாறு அரசியல் அநாகரிக வேலைகளில் ஈடுபடுவது தனது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.