நுகேகொட, மீரிஹானவில் உள்ள தமது சொந்த வீட்டிலேயே, தொடர்ந்தும் தங்கியிருக்கப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க விவகாரங்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப் போவதாகவும், வேறு எந்த அரசாங்க வதிவிடங்களும் தனக்கு தேவையில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமது பாதுகாப்பு வாகன அணியின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும், பயணங்களின் போது வீதித்தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cap comentari:
Publica un comentari a l'entrada