THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

கோர விபத்து – பாலத்திருந்து பறந்து விழுந்த கார்!! (காணொளி)

ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகிய காணொளி மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளாகிய கார் பறந்து வந்து விழுந்தபோது அதில் இருந்த ஏர் பேக் உடனடியாக செயல்பட்டதால் வாகன சாரதி உயிர் தப்பியுள்ளார்.
சாலையோரமாக தனது மகளுடன் காத்திருந்த பாதசாரி பெண் ஒருவர் கார் மோதி பரிதபமாக உயிரிழந்தார். 
வாகன சாரதி உட்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார், மணிக்கு 104 கி.மீ வேகத்தில் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாலத்தில் அதிகபட்சம் 40 கி.மீ வேகத்தில் செல்லவேண்டும் என விதி இருக்கிறது.
விதியை மீறிச் சென்று விபத்துக்குள்ளாக்கி உயிர்ப்பலிக்கு காரணமாக இருந்த வாகன சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.