THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை

controversy-over-us-citizenship-of-presidential-candidate-gotabhayaஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என அவரின் சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச்செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் ஆணையாளர் கோட்டாபய ராஜபக்சவிற்க வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான அனுமதியினை வழங்கினார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.