பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது பயணிகள் விமானம் இன்று 12.30 இற்கு வந்தடைந்துள்ளது.
ஏஎல் 9102 என்ற இந்த விமானம் சென்னையிலிருந்து வருகை தந்ததோடு 12.45 இற்கு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான சேவையானது திங்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செயற்படும் என்பதோடு, அதற்கான கட்டணமாக 7900 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கு 2500 மில்லியன் செலவாகியதோடு 300 மில்லியன் ரூபாய் இந்திய அரசாங்கம் வழங்கிருந்தது.
Cap comentari:
Publica un comentari a l'entrada