THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் ரயில்சேவை தொடக்கம்!!!

இன்று முதல் காஷ்மீரில் 100 நாட்களுக்குப் பின் இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் இன்று முதல் ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
ரயில்வே போலீசார் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்ரீநகர்- பாரமுல்லா மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.