THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008-09 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்களைக் கடத்தியது, சித்திரவதை செய்தது, கப்பம் பெற்றது, கொலை செய்ய சூழ்ச்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், 667 குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் தலைமை நீதியரசரினால் நியமிக்கப்பட்டதும், விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.