THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

ரயில் சேவையில் திடீர் மாற்றம்!!

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் நவம்பர் 11 முதல் 15 வரை தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01,9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளதாகவும், அந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மற்றும் 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் பகுதியில் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.