THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

பொலிவியா அதிபர் ஈவோ மொராலிஸ் ராஜினாமா!!!

பொலிவியாவில்,(Bolivia) நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து ஈவோ மொரேல்ஸ்(Evo Morales) விலகியுள்ளார். 
தேர்தல் முடிவு 25ம் திகதி வெளியாக இருந்த நிலையில், 24ம் திகதியே தாம் வெற்றிப்பெற்றதாக, அதிபர் ஈவோ மொரேல்ஸ் அறிவித்தார்.
இதனால், நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவத்தினரும், காவல்துறையினரும், அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு ஈவோ மொரேல்சை வலியுறுத்தினர். இதனைத் தொடரந்து பொலிவியா அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக, ஈவோ மொரேல்ஸ் அறிவித்தார்.