THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

ஏமானில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்- 10 பேர் பலி

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏமான் அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.இங்கு ஏமான் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுபடையினரும் சேர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்க்க ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசும் ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.