THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!!!

வலஸ்முல்ல-வீரகெடிய பிரதேசத்தில் வசித்துவந்துள்ள நபர் ஒருவரிடம் இருந்து 1200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய நகரில் கடற்படையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை காவல்துறையினார் மேற்கொண்டுள்ளார்.