அதற்கமைய மாத்தறை முதல் மாத்தளை வரையான பகுதியும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் இன்று திறக்கப்படவுள்ளது.
அதேபோல் கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் திறக்கப்பட உள்ளதாக நிஹால் சூரியராச்சி கூறியுள்ளார்.
இந்த வீதி திறக்கப்படவுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அதிவேக வீதி முறையாக அமைக்கப்படாமல் அரசியல் நோக்கம் கருதி திறக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada