THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

விளையாட்டுத்துறை அமைச்சர்- கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் இடையிலான சந்திப்பு!!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன வீர, வீராங்கனைகளுக்கு அநியாயம் நேர்ந்திருந்தால் அது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளையாட்டு பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகலவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சில வீர,வீராங்கனைகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
இதுதொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. 
ஒப்பந்த உடன்படிக்கையில் உள்ளடக்காத கிரிக்கெட் வீரர்கள் குறித்து அமைச்சர் அங்கு கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.