THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

டிசம்பர் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!!

இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பான யோசனை சபை முதல்வரினால் முன்வைக்கப்படவுள்ளது. 
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையினால் நாடாளுமன்றத்தில் கூட்ட மதிப்பு எண்ணுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சிக்கல் நிலைமை ஏற்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இந்தற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.