THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு!!!

அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட ,லங்கை, இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட முப்படையின் தலைமையகங்களையும் ஒரே இடத்தில் பேணும் நோக்குடன், பெலவத்தை – அகுரேகொடயில் 77 ஏக்கர் காணியில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.53.3 மில்லியன் ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் இன்று ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படுகின்றது.