THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

காட்டு யானை தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு!!!

காட்டு யானை தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு!!!

அம்பாறை-மங்களகம-கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 59 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரவு 10 மணியளவில் குறித்த நபர் வீட்டில் இருந்த வேளை, யானையொன்று இவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கல்கிரயாகம ஆடியாகல பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் யானையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் ஆடியாகல-கஹல்ல பகுதியில் வசித்து வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.