THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

மனைவியால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்!!!

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கணவனை காரோடு எரித்து கொன்ற மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே பரத்தி எனும் பகுதியில் வீதியின் ஓரம் முழுவதும் எரிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்த காரில் முற்றிலும் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று கிடந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காருடன் எரித்து கொல்லப்பட்டது நொய்யலை சேர்ந்த தொழிலதிபர் ரங்கசாமி என்பது தெரியவந்தது.
ரங்கசாமியின் மரணம் குறித்து விசாரித்த போது, ரங்கசாமிக்கு வேறு ஒரு பெண்ணிடன் தகாத உறவு இருந்து வந்ததும். இதனால் அவர் தன் மனைவியை துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது மனைவி கவிதாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
கவிதா தனது மகன் அஸ்வின் குமாருடன் இணைந்து ரங்கசாமியை கழுத்தை நெறித்து கொன்று காருக்குள் போட்டுவிட்டு பரமத்தி அருகே காரை நிறுத்தி தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தாயையும் மகனையும் கைது செய்துள்ளனர்.